போலந்து நாட்டில் கிஸ்மார்க் நகரில் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் திடீரென நிலைகுலைந்து ஓடி எதிர்திசை சாலைக்குள் புகுந்தது.
இதை கண்ட 2 பெண் பயணிகள் எழுந்து சென்று பார்க்கும் போது டிரைவர் இருக்கையில் அவர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே சுதாரித்துக் கொண்டு, ‘யாராவது வந்து பஸ்சை ஓட்டுங்கள்’ என கூச்சல் போட்டனர். ஒரு ஆண் பயணி சென்று பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார்.
இதனால் 20 பயணிகளும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். டிரைவர் எதிர்பாராமல் வெளியே தவறி விழுந்ததே சம்பவத்துக்கு காரணம் ஆகும். அவரும் லேசான காயங்களுடன் தப்பினார்.
பஸ் நிலைகுலைந்து ஓடிய போது சாலையில் சென்ற ஒரு காரையும் பதம் பார்த்தது. அதிலும் யாரும் காயம் ஏற்படாமல் தப்பினர்.
No comments:
Post a Comment